search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமாரி அம்மன் கோவில்"

    • உச்சிஷ்ட கணபதியிடம் வேண்டிக்கொண்டால், மாணவ-மாணவிகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குவர்.
    • பைரவரிடம் வேண்டிக்கொண்டால் வியாதிகள் குணமாகும். பயங்கள் நீங்கும்.

    * வீட்டில் யாருக்கேனும் அம்மை போட்டிருப்பதைத் தெரிவித்தால், கோவிலில் மஞ்சளும் வேப்பிலையும் கலந்த தீர்த்தம் தருவார்கள். அதைக் கொண்டுபோய், அம்மை வார்த்தவர்கள் மீது தெளித்தால் உக்கிரம் தணியும்.

    * இரண்டாம் பிரகாரத்தில் இருக்கும் மரச்சிலை அம்மனிடம் வேண்டிக்கொண்டு பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டினால், கணவன்-மனைவி பிணக்கு தீரும். மாமியார்-மருமகள் சண்டை மறையும்.

    * 508 தீபங்களை ஏற்றி வைத்தால் திருமணத் தடை நீங்கும். 1008 தீபங்களை ஏற்றி வைத்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

    * உச்சிஷ்ட கணபதியிடம் வேண்டிக்கொண்டால், மாணவ-மாணவிகள் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குவர். உச்சிஷ்ட கணபதியின் மடியில் இருக்கும் நீலா சரஸ்வதி எல்லையிலா கல்வி ஞானத்தை அளிப்பவள்.

    * பைரவரிடம் வேண்டிக்கொண்டால் வியாதிகள் குணமாகும். பயங்கள் நீங்கும். எதிரிகளால் இடர் ஏற்படாது.

    * அடிக்கடி யாகம், தினம் தினம் அபிஷேகம் ஆகியவற்றின் மூலம் அம்மன் சிலைக்கு மந்திர உருவேற்றுதல் நிகழ்ந்து கொண்டே இருப்பதால், கருமாரி அம்மன் மஹாசக்தி வாய்த்தவள். வேண்டுவன அனைத்தையும் நிறைவேற்றுபவள்.

    ×